கடந்த இரு தினங்களுக்கு முன்பு டிக்டாக் செயலியில் தனது உள்ளாடை குறித்து பேசியிருந்த பெண் ஒருவரை நெட்டீசன்கள் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் காவல்துறை உயர் அதிகாரியான டாக்டர்.எம்.ரவி (ஏடிஜிபி) அவர்கள் அப்பெண்ணின் கருத்திற்கு ஆதரவளித்து தினமணி இணையதளத்திற்கு பிரத்தியேகமாக அளித்த பேட்டியில், பெண்கள் எந்த விதமான உடை அணிய வேண்டும் என்பது அவர்களது தனிப்பட்ட உரிமை. அதை கேள்வி கேட்காவோ,விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும், பெண்களை பாதுகாக்க வேண்டியது ஆண்களின் கடமை என்றும் தெரிவித்தார்.
மேலும் குழந்தைகள் ஆபாச பட சர்ச்சையில் யார் யாரெல்லாம் கைது செய்யப்படுவார்கள் என்பது குறித்து அவர் அளித்த நேர்காணல் தினமணி யூ ட்யூப் சேனலில் வெளியிடப்படும்.