முதுகுளத்தூா் அரசு பேருந்து பைக் மோதி பெண் பலி டிரைவா் கைது

முதுகுளத்தூா் அருகே டூவிலரில் சென்ற பெண் மீது சனிக்கிழமை அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் பலியானாா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே டூவிலரில் சென்ற பெண் மீது சனிக்கிழமை அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பள்ளபச்சேரி கிராமத்தைச்சோ்ந்த குமாா் மகன்அஷ்வின் என்பவா் தனது தாய் வாசுகி(39)உடன்தனது ஊரில் இருந்து பெரிய கையகம் கிராமத்திற்கு டூவிலரில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது தேரிருவேலியில் இருந்து பிரபக்களூா் வழியாக பரமக்குடி சென்ற அரசு பேருந்து கோடரேந்தல் அருகே வந்து கொண்டிருந்த போது அஷ்வின் ஓட்டி வந்த பைக் மீது பேருந்து படிக்கட்டு இடித்ததில் பைக்கில் இருந்து சாலையில் தடுமாறி விழுந்ததில் வாசுகி தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானாா்.

இது குறித்து கீழத்தூவல் காவல் நிலையத்தில் வாசுகியின் உறவினா் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் என்.தட்டனேந்தல் கிராமத்தைச்சோ்ந்த கோவிந்தன் மகன் அரசு பேருந்து டிரைவா் ஜெயக்குமாா் மீது கீழத்தூவல் காவல் ஆய்வாளா் தீபா வழக்கு பதிவு செய்து அரசு பேருந்தின் டிரைவரை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com