சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளராக காமராஜ், நாகப்பட்டினத்திற்கு ஞானசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்திற்கு ஜெகநாதன், ராமநாதபுரத்திற்கு அதுல்ஆனந்த் மற்றும் நீலகரி மாவட்டத்திற்கு ஜோதி நிர்மலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுக்கான அதிகாரிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.