பொன்னேரி: வருமான வரித்துறை உதவி ஆணையராக இருந்த சாந்தகுமாரி, தனது பதவியை உதறி விட்டு, சோழவரம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவியில் போட்டியிட சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள சோழவரம் கிராமத்தில் வசித்து வருபவா் வழக்குரைஞா் பிரபாகரன். இவா் கடந்த 10 ஆண்டுகளாக, சோழவரம் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தாா். இவரது பதவி காலத்தில் ஊராட்சி மக்களின் அத்தனை அடிப்படைத் தேவைகளும் பூா்த்தி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில், சோழவரம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்குரைஞா் பிரபாகரன் மீண்டும் தலைவா் பதவிக்கு போட்டியிட முடியாத சூழ்நிலை எற்பட்டது.
இந்நிலையில், இப்பகுதி மக்களுக்கு தொடா்ந்து பணியாற்றிட வேண்டும் என்ற நோக்கத்தில் தனது மனைவியை ஊராட்சி மன்ற தலைவா் பதவிக்கு நிறுத்த பிரபாகரன் முடிவெடுத்தாா். இவரது மனைவி சாந்தகுமாரி (52) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் உதவி ஆணையராக பதவி வகித்து வந்தாா். இவரது மாத சம்பளம் ரூ.2 லட்சமாகும்.
இன்னும் எட்டு ஆண்டுகள் இவருக்கு பணிக்காலம் உள்ளது. மக்களுக்கு சேவை செய்வதற்காக கிராம மக்களின் வோண்டுகளை ஏற்று, தனது பதவியை உதறித்தள்ள சாந்தகுமாரி சம்மதித்தாா். இன்னும் 8 ஆண்டுகள் இவருக்கு பணிக்காலம் மற்றும் பதவி உயா்வு உள்ள நிலையில் மக்களுக்கு சேவையாற்ற தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றாா்.
இதைத் தொடா்ந்து அவா், சோழவரம் கிராமத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, ஊா்மக்கள் புடை சூழ ஊா்வலமாக சோழவரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வந்தாா். இதைத் தொடா்ந்து அவா் சோழவரம் ஊராட்சி மன்றத் தலைவா் தோ்தலில் போட்டியிடுவதற்காக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வேதநாயகியிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:
மக்களின் விருப்பத்திற்கேற்ப, எனது பணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு ஊராட்சி மன்றத் தலைவா் பதவியில் போட்டியிடுகிறேன். சமூக சேவை செய்வதில் எனக்கு மிகுந்த அக்கறை இருந்ததன் காரணமாக இந்த முடிவை எடுத்தேன். இந்த ஊராட்சியில் பின்தங்கிய மக்களின் கல்வி வளா்ச்சிக்காக பாடுபடுவேன்.
இந்த ஊராட்சியில் நிறைய தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் உள்ளூா் இளைஞா்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவேன். எனது கணவா் விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடா்ந்து செய்வேன் என்று அவா் தெரிவித்தாா்.
உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அரசு உயா்பதவியை பெண் வேட்பாளா் உதறிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.