சென்னை : மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களைப் பெறும் நிகழ்வு கடந்த 4-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய தினத்தில் 250 பேர் வரை மனுக்களைப் பெற்றனர். இந்த நிலையில், செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இரு நாள்களிலும் விருப்ப மனுக்களைப் பெற கட்சியினர் ஆர்வம் காட்டி வந்தனர். குறிப்பாக, புதன்கிழமையன்று 200 பேர் வரை விருப்ப மனுக்களைப் பெற்றனர்.
அதிமுக எம்.பி.,க்களாக உள்ள சிலரும் விருப்ப மனுக்களை புதன்கிழமை பெற்றுச் சென்றனர். மைத்ரயேன், மரகதம் குமரவேல், வேணுகோபால், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் விருப்ப மனுக்களை பெற்று சென்றதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் விருப்ப மனுக்கள் விநியோகம் இன்று (பிப்ரவரி 10) மாலை 5 மணியுடன் விருப்ப மனு விநியோகம் நிறைவடைகிறது.