அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அந்தமானில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.