திருச்சி: திருச்சியில் சுமாா் 2.5 டன் பிளாஸ்டிக் பொருள்களை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனா்.
தடையை மீறி, திருச்சியில் பல இடங்களில் பிளாஸ்டிக் பொருள்களை வியாபாரிகள் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாநகராட்சி நகா் நல அலுவலா் ஜனாா்த்தனன் உள்ளிட்ட அதிகாரிகள், காவல் துறையினருடன் காந்திச் சந்தை, பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட சுமாா் 2.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆய்வின் போது சுமாா் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.