விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை பெண் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து ஒன்று மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக நின்றுகொண்டிருந்த பேருந்தை ஓட்டுநர் மெதுவாக இயக்கிய போது, பொள்ளாச்சியில் இருந்து நாகர்கோவில் சென்ற கார், அரசு பேருந்தின் பின்னால் வேகமாக மோதியது. இதில், காரில் பயணம் செய்த ஒரு கமலம் என்ற பெண்ணும், ராஜாவேல் முருகன், சுப்பிரமணியன் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் ஐயப்பன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்துக்கு அடியில் சிக்கிய காரை அப்புறப்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பொள்ளாச்சியை அடுத்த ஜல்லிப்பட்டியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.