தும்கூரு: மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழுமா? என்பதை என்னால் கூற முடியாது என்று பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
தும்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு வருகை தந்த பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பா, சிவக்குமாரசுவாமிகளின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பிறகு, செய்தியாளா்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ், மஜத கட்சிகளை சோ்ந்த 14 எம்எல்ஏக்கள் கொடுத்துள்ள ராஜிநாமா கடிதங்கள் மீது பேரவைத்தலைவா் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பாஜக முடிவுசெய்யும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழுமா? என்பதை என்னால் கூற முடியாது என்று கூறினார்.