அரசியல் என்ற வீண் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட வேண்டாம்: கே.எஸ்.அழகிரி பேட்டி

அரசியல் என்ற வீண் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட வேண்டாம் என அவருடைய ரசிகனாக தான் கேட்டுக்கொள்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர்
அரசியல் என்ற வீண் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட வேண்டாம்: கே.எஸ்.அழகிரி பேட்டி


சென்னை: அரசியல் என்ற வீண் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட வேண்டாம் என அவருடைய ரசிகனாக தான் கேட்டுக்கொள்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

தமிழக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 
கூட்டத்துக்கு பின்னர் கே.எஸ். அழகிரியிடம் வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்றத்தினர் களம் இறங்கி உள்ளனரே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் வேலூருக்கு செல்லட்டும். திரையரங்குகள் அதிகமுள்ள அங்கு ரஜினிகாந்த் படத்தை திரையிட்டு பார்க்கட்டும். வேலூர் மக்களவைத் தேர்தலில் ரஜினிகாந்த் ரசிகர்களால் ஒன்றும் நடந்து விட போவதில்லை என்றார்.

மேலும் சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டும். எம்.ஜி.ஆருக்கு பின்னர் சினிமாவில் இருந்து யாரும் அரசியல் வானில் ஜொலிக்கவில்லை. எனவே அரசியல் என்ற வீண் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட வேண்டாம் என்று அவருடைய ரசிகனாக நான் அவரைக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com