விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் வென்றார்.
லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), முன்னாள் சாம்பியன் பெடரரை (சுவிட்சர்லாந்து) எதிர்கொண்டார்.
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6, 6-1, 7-6, 4-6, 13-12 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் 5ஆவது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.