மகாராஷ்டிரா: மகாராஷ்டிரத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.5 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "பல்கார் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிராவின் பல்கர் பகுதியில் அதிகாலை 1.5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
சில வினாடிகள் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும் எவ்வித சேதமும் இல்லை' என்றனர்.