கடப்பாவில் நிலத்தை தோண்ட தோண்ட நாட்டு வெடிகுண்டுகள்: பொதுமக்கள் அதிர்ச்சி

கடப்பாவில் நிலத்தை தோண்ட தோண்ட நாட்டு வெடிகுண்டுகள்: பொதுமக்கள் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் கடப்பாவில் நிலத்தை தோண்டத் தோண்ட 54 நாட்டு வெடிகுண்டுகள் கிடைத்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் வைத்துள்ளது.

    
ஆந்திர மாநிலம் கடப்பாவில் நிலத்தை தோண்டத் தோண்ட 54 நாட்டு வெடிகுண்டுகள் கிடைத்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் வைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் முத்தனுறு சாலை பகுதியில், புருஷோத்தம் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு வீட்டு மனை பட்டா அமைக்க ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் பொக்லைன் உதவியோடு நேற்று செவ்வாய்கிழமை நிலத்தை தோண்டியுள்ளனர். அப்போது நான்கு நாட்டு வெடிகுண்டுகள் கொண்ட வாளி ஒன்று வெளியே வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ரியல் எஸ்டேட் பணியாளர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டபோது 54 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், பொதுமக்களை அப்புறப்படுத்தி அப்பகுதியை முழுவதும் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். அந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள நாட்டு வெடிகுண்டுகள் அனைத்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டது என்றும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com