இந்திய கடற்படைக்கு எம்.எச். 60 ரக ஹெலிகாப்டர்கள் வாங்க அமெரிக்காவுடன் ரூ. 17 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளதாக கடற்படை தளபதி கரண்பீர் சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய கடற்படைக்கு எம்.எச். 60 ரக ஹெலிகாப்டர்கள் வாங்க அமெரிக்காவுடன் ரூ. 17 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. எம்.எச். 60 ரக ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான கோரிக்கை கடிதம் மற்றும் ஏற்பு கடிதம் ஆகியவற்றுக்கான நடைமுறை நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்துவிதமான நடவடிக்கைகளும் முடிவாகி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறினார்.