லக்னௌ: உத்தரபிரதேச மாநில ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு லக்னௌ உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்த் மதுர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மத்தியபிரதேச மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த ஆனந்திபென் பட்டேல், உத்தரபிரதேச மாநில ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்று திங்கள்கிழமை உத்தரபிரதேச மாநில ஆளுநராக ஆனந்திபென் படேல் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு லக்னௌ உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்த் மதுர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் மாநில முன்னாள் ஆளுநர் ராம் நாயக்கும் பங்கேற்றார்.