மதுரை: தேர்தல் முடிவில் உண்மை உறங்கிவிட்டது. பொய் ஊர்வலம் வந்துவிட்டது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் முடிவு குறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடந்து முடிந்த தேர்தல் முடிவில் உண்மை உறங்கிவிட்டது. பொய் ஊர்வலம் வந்துவிட்டது என்றும், மக்களின் தீா்ப்பை மகேசன் தீா்ப்பாக ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில் அவா்கள் தான் ஏஜமானர்கள்.
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளதாக எழுந்த புகார் குறித்து நாங்கள் பேசுவதை விட தமிழக முதல்வர் பேசினால்தான் சரியாக இருக்கும்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட தோல்விக்கு அதிமுகவே காரணம் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறிய கருத்துக்கு பதிலளிக்கையில், யார் யாரோ கூறும் கருத்துக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது.
அதிமுக அரசு மீது யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம் என்றார்.