சென்னை: தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே அதிமுக அரசின் உறுதியான கொள்கை முடிவு என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என ஜெயலலிதா பேரவையில் பலமுறை உறுதிபட கூறியிருக்கிறார்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் இருமொழிக் கொள்கையே அதிமுக அரசின் மொழிக்கொள்கை என்றார்.