சென்னை: சசிகலா, தினகரன் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்துவிட்டனர்.
அமமுகவில் இருந்து பலரும் அதிமுகவிற்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சசிகலா, தினகரன் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இணைப்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும். அவர் அதிமுகவில் இணைவதற்கு யாரும் முட்டுக்கட்டையாக இல்லை என்றார்.
மேலும், கொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாத கட்சிக்கு இதுதான் நிலை என்றவர் தினகரனுக்கு மூன்று நாமம்தான் கிடைக்கும் என கூறினார்.