12-ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 214 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டமிழந்தது.