உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கொல்கத்தா கூட்டம் ரத்து
By DIN | Published On : 15th May 2019 12:51 PM | Last Updated : 15th May 2019 01:09 PM | அ+அ அ- |

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உத்தரபிரேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், பேரணியை நோக்கி கற்களை வீசினர். இதில் காயம் ஏதுமின்றி அமித் ஷா தப்பினார். இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி வன்முறையாளர்களைக் கலைத்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கொல்கத்தாவில் பெரும் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உத்தரபிரேச முதல்வர் ஆதித்யாத் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் எதிரொலியாக ஆதித்யநாத் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது .