காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் இன்று காலை நடந்த என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம்
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீரில் இன்று காலை நடந்த என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். 

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் தலிபோரா பகுதியில் ஒரு வீட்டில் 2 பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. 

இதையடுத்து இன்று அதிகாலை பயங்கரவாதிகள் தங்கியுள்ள பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இதனை அறிந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி தூப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். 

அதிகாலை முதல் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்து வந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். மேலும் 2 வீர்ர்களும், பொதுமக்களில் ஒருவரும் காயமயைந்துள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையை அடுத்து புல்வாமா மாவடத்தில் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.


Dalipora(Pulwama) encounter: 3 terrorists killed, one jawan has lost his life. Operation continues

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com