தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேமுதிக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும் 7.11.2019 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது. தாங்கள் அனைவரும் தவறாமல் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளது.
இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.