முகப்பு தற்போதைய செய்திகள்
மிலாது நபி: அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை
By DIN | Published On : 07th November 2019 03:58 PM | Last Updated : 07th November 2019 03:58 PM | அ+அ அ- |

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் மிலாது நபியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு வரும் 10-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் இன்று வியாழக்கிழமை(நவ.7) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருவள்ளா் மாவட்டத்தில் மிலாது நபியை முன்னிட்டு, இந்திய தயாரிப்பான அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் மனமகிழ் மன்றம் மற்றும் கிளப் உரிம வளாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு, அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும். எனவே அரசு விதிமுறைகளை மீதி அன்றைய நாளில் மதுக் கடைகள், மதுக்கூடங்களில் மதுவகைகள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.