வரும் 24-ம் தேதி அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்

வரும் 24 ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறவிக்கப்பட்டுள்ளது. சசிகலா நீக்கத்திற்கு பிறகு நடைபெறும்
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓபிஎஸ் - ஈபிஎஸ்


சென்னை: வரும் 24 ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறவிக்கப்பட்டுள்ளது. சசிகலா நீக்கத்திற்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக இந்த பொதுக்குழு பார்க்கப்படுகிறது. 

இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 24 ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கி நடைபெறுகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.  

இதற்கு முன்பு நடந்த கூட்டத்தில்தான் அதிமுக ஒருப்பிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்படுத்கப்பட்டன. அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவி இனி கிடையாது என்றும் முந்தைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்திற்கு செயற்குழு, பொதுக்குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படும். அனைவரும் தங்களது அழைப்பிதழுடன் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சசிகலா நீக்கத்திற்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com