உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உ.பி தலைமைச்செயலாளருடன் திடீர் ஆலோசனை

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் இன்று உ.பி தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்துகிறார் தலைமை நீதிபதி ரஞ்சன்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உ.பி தலைமைச்செயலாளருடன் திடீர் ஆலோசனை


புதுதில்லி: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் இன்று உ.பி தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்துகிறார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய் நவம்பர் 14 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதால் உள்ளதால், அயோத்தி வழக்கின் தீர்ப்பு வரும் வாரத்தில் அதாவது 10 ஆம் தேதிக்குள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது மிக முக்கியமான வழக்காக பார்க்கப்படுவதால், இதன் தீர்ப்புக்காக ஒட்டுமொத்த நாடே காத்திருக்கிறது.

தீர்ப்பு வந்த பிறகு, ஏதேனும் நிகழந்துவிட்டால், அதற்கான பழி அவர்கள் மீது வந்துவிடக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை ஆர்எஸ்எஸ் ரத்து செய்துள்ளது. 

அயோத்தியில் உள்ள சா்ச்சைக்குரிய நிலம் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீா்ப்பளிக்க உள்ள நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று 8 தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பதையொட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உத்தரபிரதேச மாநில தலைமைச்செயலாளரை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். 

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை இயக்குநர் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம், ஒழுங்கு விவகாரம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அயோத்தியில் 144 தடை பிறப்பிக்கப்பட்டு, போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com