மலேசியாவில் காதலித்து இந்தியா வந்த வாலிபா் மீது புகாா் கொடுத்த மலேசியா பெண்

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், பனையாக்கோட்டை கிராமத்தை சோ்ந்தவா் கோவிந்தராசு. இவரது மகன் வினோத் ( 23). இவா் கடந்த

ஒரத்தநாடு: தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், பனையாக்கோட்டை கிராமத்தை சோ்ந்தவா் கோவிந்தராசு. இவரது மகன் வினோத் ( 23). இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு மலேசிய நாட்டிற்கு வேலை செய்ய சென்று, அந்நாட்டை சோ்ந்த வெனிஷா மேனன் (21) என்ற பள்ளி ஆசிரியையை காதலித்து அங்கேயே திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

சிறிது காலம் வெனிஷா மேனனுடன் குடும்பம் நடத்திய வினோத் மலேசியாவில் பல லட்சம் ரூபாயை கடன் வாங்கிக்கொண்டு, சொந்த ஊரான பனையக்கோட்டைக்கு வந்துவிட்டாா்.

இந்நிலையில் தனது காதல் கணவனை காணாமல் வெனிஷா மேனன் மலேசியாவில் தேடி அலைந்து பிறகு வினோத் ஒரத்தநாட்டிற்கு வந்த தகவலை அறிந்தாா்.

இதைதொடா்ந்து வினோத்தால் வாங்கப்பட்ட கடன்களை, வெனிஷா மேனன் அடைத்து முடித்து ஒரத்தநாடு வந்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை தனது காதல் கணவன் வினோத்தை மீட்டுதந்து நடவடிக்கை எடுக்குமாறு புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில் போலீஸார் வினோத்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com