மும்பை: மகாராஷ்டிர மாநிலம், தெற்கு மும்பையின் கல்பாதேவி பகுதியில் உள்ள ஒரு துணி குடோனில் இன்று சனிக்கிழமை அதிகாலை (நவ.23) தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவம் குறிந்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து நிகழ்விடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றன.
இந்த விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்போ, காயங்களோ நிகழவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சேதங்கள், தீ விபத்திற்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாக வில்லை.