சென்னையில் தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் தீ விபத்து
By DIN | Published On : 26th November 2019 07:40 AM | Last Updated : 26th November 2019 07:40 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை கொடுங்கையூர் சிட்கோ நகரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை கொடுங்கையூர் சிட்கோ நகரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து நிகழ்விடத்துக்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.