உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளரும், உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.