இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா தலங்கள் தற்காலிக மூடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் 11-ஆம் தேதி வருகை தருவதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சுற்றுலாப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய்கள் மூலம் போலீஸார் பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐந்துரதம், அர்ஜுனன் தபசு , கடற்கரைக்கோயில், வெண்ணெய் உருண்டைப்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் தற்காலிக மூடப்படுவதாக காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.