புதுதில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாளையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35வது நினைவு தினம் இன்று. இதனையொட்டி நாடு முழுவதும் இந்திரா காந்தியின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தில்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
இந்தியாவின் இரும்பு மனுஷி என்று அனைவராலும் பாராட்டப்பட்ட இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, தன்னுடைய பாதுகாப்பு காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மறைவானது உலக அரங்கில் பெரிய அதிர்வினையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.