கொடைக்கானல்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டப்படி இன்று நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதேபோன்று கொடைக்கானல் மற்றும் ஆடலூர், பன்றிமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டப்படி இன்று நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் செய்முறை தேர்வுகள் திட்டமிட்டப்படி இன்று நடைபெறும் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.