தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதேபோன்று கொடைக்கானல் மற்றும் ஆடலூர், பன்றிமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.
நீலிகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.
புதுச்சேரி, காரைக்காலில் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.