மும்பை ஓஎன்ஜிசி ஆலையில் தீ விபத்து: 4 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள ஓஎன்ஜிசி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி
மும்பை ஓஎன்ஜிசி ஆலையில் தீ விபத்து: 4 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள ஓஎன்ஜிசி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை அருகே யுரானில் ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி) நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் உள்ளது. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 7 மணியளவில் ஆலையின் எண்ணெய் கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மற்ற இடங்களுக்கும் பரவியது. 
 
இதையடுத்து பணியில் இருந்த ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். அவருடன் போலீஸாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்த தீ விபத்தில் பணியில் இருந்த 4 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனிடையே, தீ விபத்து நிகழந்த உடனேயே, ஆலையின் தீயணைப்பு சேவைகள் குழு மற்றும் நெருக்கடி மேலாண்மை குழு தீவிரமாக செயல்பட்டனர். தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். இதனால் எண்ணெய் வெளியேறும் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை. எரிவாயு ஹசிரா ஆலைக்கு திருப்பி விடப்பட்டதாகவும், பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக ஓஎன்ஜிசி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com