ஒரே நாளில் இரண்டு முறை விலை  குறைந்த தங்கம்

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை விலை  குறைந்துள்ளது. 
ஒரே நாளில் இரண்டு முறை விலை  குறைந்த தங்கம்

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை விலை  குறைந்துள்ளது. 

கடந்த ஒரு மாத காலமாகவே கடுமையாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது கடந்த புதன்கிழமை சவரன் 30 ஆயிரம் ரூபாயை கடந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலையானது இன்று ஏற்கனவே சவரனுக்கு  328 ரூபாய் குறைந்த நிலையில் தற்போது மேலும் 42 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் 29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 3 ஆயிரத்து 658 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தற்போது வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 51 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 1 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com