அசாம் மாநிலம் கர்பி அங்லாங்கில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அசாம் மாநிலம் கர்பி அங்லாங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 7.03 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 அலகுகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் இல்லை.
முன்னதாக, ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் சம்பா பகுதியில் நள்ளிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.4 அலகுகளாகப் பதிவான என்பது குறிப்பிடத்தக்கது.