சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வில் இன்று விசாரணை இல்லை

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு முன் பட்டியலிடப்பட்ட வழக்குகள் இன்று விசாரணை இல்லை என்று
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வில் இன்று விசாரணை இல்லை


சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு முன் பட்டியலிடப்பட்ட வழக்குகள் இன்று விசாரணை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்திருந்தார்

இந்நிலையில், தலைமை நீதிபதி தஹில் ரமானி தலைமையிலான அமர்வில் விதிமீறல் கட்டடங்கள், நில ஆக்கிரமிப்பு, உள்ளாட்சி நடவடிக்கை உட்பட 75 வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், இன்று வழக்குகள் விசாரணை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தலைமை நீதிபதி தஹில் ரமானி இன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வரவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com