ஜம்மு காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் இன்று புதன்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி ஆசிப் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் பயங்கரவாதிகளும் போலீஸாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி ஆசிப் சுட்டுக்கொல்லப்பட்டான். இரண்டு போலீஸார் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்தில் இருந்து ஆயுதங்களும், வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
சோப்பூரில் அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பழ வியாபாரியின் குடும்ப உறுப்பினர்கள் காயமடைந்தனர். இதற்கு இன்று சுட்டுக்கொல்ல பயங்கரவாதி ஆசிப் காரணம். காயமடைந்தவர்களில் அஸ்மா ஜன் என்ற இளம்பெண்ணும் அடங்குவார்.