ஒரு நாள், ஒரு பொழுதாவது எனக்கு விடியும்: விஜயகாந்த் உருக்கமான பேச்சு

ஒரு நாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும், அப்போது தமிழக மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன் என்று தேமுதிக நிறுவனத் தலைவா்
ஒரு நாள், ஒரு பொழுதாவது எனக்கு விடியும்: விஜயகாந்த் உருக்கமான பேச்சு


ஒரு நாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும், அப்போது தமிழக மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன் என்று தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்த் பேசினார். 

திருப்பூா் மாவட்ட தேமுதிக சார்பில் கட்சியின் நிறுவனத் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி விஜயகாந்த் பேசுகையில், ஒரு நாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்துக்கு விடியும். அப்போது உங்களை தங்கத் தட்டில்வைத்துத் தாலாட்டுவேன்.

அடுத்த முறை ஒரு மணி நேரம் பேசுகிறேன். இதுபோல் தமிழகம் முழுவதும் செல்வேன். இந்த விழாவில் பங்கேற்க வந்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பொழுது அனைவரும் பத்திரமாக வீடுபோய் சேருங்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com