ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா சிறை வைக்கப்பட்டதற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனுது டிவிட்டர் பக்க பதிவில் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த கவலை கொண்டுள்ளேன்.
மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரை சிறைக்குள் வைத்திருக்கும் செயல் அதிகப்படியான, தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமானது. கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.