சென்னை: அதிமுக அரசின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான சிடிஎஸ் சென்னையில் புதிய கட்டடம் கட்ட அனுமதிக்காக, அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் தந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தி இருக்கிறது.
அதிமுக அரசின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்திருக்கிறது.
மேலும், லஞ்சம் தந்தவர்களுக்கு அமெரிக்கா தண்டனை தந்திருக்கிறது. லஞ்சம் வாங்கிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கைக் கூட போடாமல் பாதுகாக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை.
அதுமட்டுமல்ல மத்திய அரசும், சிபிஐயும் கண்டும் காணாமல் இதை ஊக்குவிக்கின்றனவா? என கேள்வி எழுப்புள்ளார்.