தில்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு நீலகிரி திரும்பிய 4 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பி வந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் கண்டறியப்பட்டு மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இதில் இருவர் காந்தல் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் காந்தல் பகுதி முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளது.
மேலும் கோத்தகிரியில் ஒருவரும், குன்னூரில் ஒருவரும் கண்டறியப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.