ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 85 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், ஆழ்வாரைச் சேர்ந்த 85 வயதுடைய முதியவர் காய்ச்சல் காரணமாக, மார்ச் 31 ஆம் தேதி எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ராஜஸ்தானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்த முதியவருக்கு மூளை பக்கவாத நோய் இருந்ததாகவும் கூடுதல் தலைமைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.