கரோனா: ராஜஸ்தானில் 85 வயதான முதியவர் பலி

ராஜஸ்தானில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 85 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 85 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தான், ஆழ்வாரைச் சேர்ந்த 85 வயதுடைய முதியவர் காய்ச்சல் காரணமாக, மார்ச் 31 ஆம் தேதி எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ராஜஸ்தானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. 

உயிரிழந்த முதியவருக்கு மூளை பக்கவாத நோய் இருந்ததாகவும் கூடுதல் தலைமைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com