கரோனா பாதிப்பு: அனைத்து மாநில ஆளுநர்களுடன் ராம்நாத் கோவிந்த் நாளை ஆலோசனை

கரோனா நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  அனைத்து மாநில ஆளுநர்களுடன் வெள்ளிக்கிழமை (ஏப்.3) காணொலி முறையில் கலந்துரையாட இருக்கிறாா்.
கரோனா பாதிப்பு: அனைத்து மாநில ஆளுநர்களுடன் ராம்நாத் கோவிந்த் நாளை ஆலோசனை

கரோனா நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  அனைத்து மாநில ஆளுநர்களுடன் வெள்ளிக்கிழமை (ஏப்.3) காணொலி முறையில் கலந்துரையாட இருக்கிறாா்.

தில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மத கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய பலருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய அளவில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தில்லி கூட்டத்துக்கு சென்றுவிட்டு திரும்பியவா்களை கண்டுபிடிப்பதிலும் சில மாநிலங்களில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியிருக்கும் நிலையில், நாளை வெள்ளிக்கிழமை (ஏப். 3) மாநில ஆளுநர்களுடன் காணொலி முறையில் கலந்துரையாட 
இருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com