ராமநாதபுரம்: கரோனா நோய்த்தொற்றுக்கு பயந்து கடலில் குதித்து நீந்தி கரைக்கு வர முயன்ற ராமநாதபுரம் மீனவர் உயிரிழந்தார்.
கரோனா நோய் தாக்கும் என உயிருக்கு பயந்து ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் - மங்களூரிலிருந்து படகில் 20 பேர் கடல் வழியாக வந்தபோது முருகன் என்பவர் வலங்காபுரி கடல் பகுதியில் குதித்து கடலில் நீந்தி கரைக்கு செல்ல முயன்ற போது உயிரிழந்துள்ளார். அவருடன் வந்த மற்ற 19 பேரும் உயிருடன் கரை திரும்பியுள்ளனர்.
அவரது உடலை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்து உடற்கூறு ஆய்வு செய்ய உள்ளனர்.