உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் 7 ஆயிரத்து 560 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து க்15 ஆயிரத்து 438 பேர் குணமடைந்துள்ளனர்.
இத்தாலியில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 15 ஆயிரத்து 362 பேர் உயிரிழந்துள்ளனர், ஜெர்மனியில் 96 ஆயிரத்து 108 பேரும் பாதிக்கட்டுள்ளனர், ஆயிரத்து 446 பேர் உயிரிழந்துள்ளனர்.