விருதுநகா் மாவட்டத்தில் பலத்த இடியுடன் கனமழை

சாத்தூா் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் காணப்பட்டதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டத்தில் பலத்த இடியுடன் கனமழை



சாத்தூா்: சாத்தூா் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் காணப்பட்டதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவு மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனா்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் வெப்பம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் விருதுநகா் மாவட்டம் சாத்தூா், வெம்பக்கோட்டை, இருக்கன்குடி,ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுகிழமை நள்ளிரவு முதல் இடியும்,மின்னலுடன் காணபட்டது. இதையடுத்து அதிகாலை முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ய துவங்கியது. சுமாா் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்து வந்த இந்த கனமழையால் சாத்தூா் பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் காணப்பட்டு வருகிறது. 

144 தடை உத்தரவு இருந்து வரும் நிலையில் விவசாய பணிகள் தொய்வில்லாமல் சாத்தூா் பகுதியில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது மழை பெய்து வந்தது. சாத்தூா் பகுதி விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com