உணவு பொருள்களை நேரடியாக வழங்க தடை: அரசு உத்தரவை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு, மருந்து பொருள்களை நேரடியாக வழங்க தடை விதித்து தமிழக அரசு 
chennai High Court
chennai High Court

சென்னை: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு, மருந்து பொருள்களை நேரடியாக வழங்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவிóல், கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருள்களான் காய்கறிகள், பழங்கள், பால், மருந்து உள்ளிட்டவைகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆன்லைன் மூலம் பொருள்களை விற்பனைச் செய்ய அனுமதி தரப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக அமைப்புச்சாரா தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தினக்கூலிகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்ப்டடுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் அவர்களுக்கு உணவு, மருந்து பொருள்கள், முககவசம், கிருமி நாசினி உள்ளிட்டவைகளை வழங்கி வந்தோம். மேலும் இந்த உதவிகளை வழங்கும்போது முககவசம், கையுறைகள் அணிந்து, சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழக அரசு ஏழை மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் உணவுப் பொருள்கள், மருந்து உள்ளிட்டவைகளை வழங்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை வழங்கும் எங்கள் கட்சியின் தலைவர்களை தடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சனன் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த விவகாரத்தில் உரிய கட்டுப்பாடுகளுடன் வியாழக்கிழமை (ஏப் 15) உத்தரவு பிறப்பிப்பதாக கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com