ஆந்திரத்தில் புதிதாக 80 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 893 -ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திரம் மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், புதிதாக 80 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 893 -ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை 27 பேர் இறந்துள்ளனர். நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 141 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.