லக்னௌ: உத்தரபிரதேசத்தில் புதிதாக மேலும் 20 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 2,053-ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப்பிரேதச்சில் செவ்வாய்க்கிழமை 725 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 20 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் லக்னௌவில் 4 பேர், ஆக்ராவில் 9 பேர் மற்றும் ஃபிரோசாபாத்திலிருந்து 7 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கிங் ஜார்ஜின் மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,053 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்கு இதுவரை 31 பேர் இறந்துள்ளனர், 400 பேர் தொற்றுபாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புள்ளனர்.